“வேற்றுமையின்றி கலந்திருவர் நட்டக்கால் *
தேற்றா வொழுக்கம் ஒருவன் கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறா னாயின்
தூற்றாதே தூர விடல் “
இருவர் சேர்ந்து இருக்கும்போது ஒருவருடைய நடத்தையில் பிடிக்காத விஷயம் நடந்தால் ,அதை பொருட்படுத்தாது நடத்தல் வேண்டும். அப்படி அது எல்லை மீறினால், அந்த நட்பை விலக்கிக் கொள்ளலே தவிர நண்பனது குணங்களை (அல்லது குணமின்மையை] தூற்றுதல் கூடாது.
முடிந்தவரை நல்ல பழக்கங்கள் உள்ளவர்களையே நண்பர்களாய் கொள்ளல் நன்று. சிநிகிதம் ஆனபின் , நண்பனை எல்லா சமயத்திலும் மதித்தல் வேண்டும். அவனிடத்தில் அயோக்கியமான நடவடிக்கை உண்டானால், அவனுக்கு உணர்த்தி அவனை பொறுத்தல் வேண்டும். அது முடியாமற் போனால், நட்பை விட்டாலும் விடலாமே தவிர, எக்காரணம் கொண்டும் – நட்பையோ, நண்பனையோ பழித்தல் கூடாது.
நமது எல்லா தவறுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், குணநலன்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் – மற்றவர்களையும் வேறு ஏதாவது காரணங்களையுமே தேடும் மானிடவருக்கு, இந்த பாடல் நல்ல அறிவுரையை வழங்குகிறது.